Wednesday, June 26, 2019


சுபாஷ் சந்திரபோஸ்!
'என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?'
இது ஒரு பிரபலமான நபரின் காதல் கடிதம். இன்று அவருக்குப் பிறந்த நாள். ஆம், இக் காதல் கடிதத்தை எழுதியவர் சுபாஷ் சந்திரபோஸ்!
இந்தியாவின் வீரம் செறிந்த விடுதலை வீரர். இந்தியாவின் மர்மம் நிறைந்த நபராகவும் திகழ்பவர்.
அவரது வாழ்வின் முதற் பகுதி, இடைப் பகுதி வெளிப்படையானவை.
அவரது இறுதி, மரணம் போன்றவை ரகசியமானவை!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் போல ஒரு மாதிரி அரசாங்கத்தை நிறுவியவர் போஸ். அவ்வரசாங்கத்தின் ரூபாய் நோட்டில் ஒரு வாசகம்.உங்கள் குருதியைக் கொடுங்கள். விடுதலையைத் தருகிறோம். எனும் அர்த்தத்தில் அவ்வாசகம் அமைந்திருந்தது.
ஒரு முறை முசோலினி, போஸ் குறித்து,  'அவர் காலம் தவறிப் பிறந்தவர். வரலாற்றில் மாவீரன் அலெக்ஸாண்டர், நெப்போலியனுக்கு இணையான வீரர்!' எனப் பாராட்டினார்.
நேதாஜி காங்கிரசின் இடது முகம்!
அவரது குரலை காந்தி முடக்க
முயன்றார்.  காங்கிரஸ் சித்தாந்தப் புலத்தில் வேறுபட்டார் சுபாஷ்.
இதன் பொருட்டு அவரை காங்கிரசுக்கு எதிரானவராகக் காட்டி, தமது சித்தாந்தத்
தோடு இணைத்துப் பார்க்கும் வேலை
யை, காவிக் கட்சியினர் செய்தனர்.
நேதாஜியை அவரது குடும்பத்தை கண்
காணிக்க, முடக்க, நேரு முயன்றதாக கதை கட்டினார்கள். தவறான கட்டுக்கதைகளிவை!
காந்தி, நேரு இருவரும் நேதாஜியோடு கொண்டிருந்தது சித்தாந்த முரண் மட்டுமே! மற்றபடி, அவரை அழிக்க எண்ணியவர்களல்லர்.
சரி, அந்தக் காதல் கடிதத்துக்கு வருவோம். நேதாஜி வியன்னாவில் சிகிச்சை பெற்ற போது, அவரது எழுத்துப் பணிக்கு உதவியாளராக வந்தவர் எமிலி.
அந்த எமிலி மீது கொண்ட காதலில் எழுதப்பட்டதே அக்கடிதம்.
1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாள் தங்களது திருமணம் நடைபெற்ற
தாக பிறகு எமிலி தெரிவித்தார்.
தேச விடுதலையில் இருந்த நாட்டத்தால் போஸ் தனது திருமணச் செய்தியை வெளிப்படுத்தவில்லை. மிகச் சொற்ப
காலமே இவர்கள் இணைந்து வாழ்ந்தனர்.
தேசப்பற்றால் காதலையும் இழந்த
வீரர் சுபாஷ் சந்திர போஸ்!

No comments: