Thursday, November 1, 2012

எம் தேசம் விழித்தெழட்டும் 

எங்கே மனது பயமற்று, தலைநிமிர்ந்து நிற்கிறதோ,

எங்கே அறிவு தடைகளற்றிருக்கிறதோ,

 எங்கே உலகு, குறுகிய தன்னலச் சுவர்களால், துகள்களாய் சிதைபடாதிருக்கிறதோ,

எங்கே வார்த்தைகள், உண்மையின் ஆழத்திலிருந்து வெளிவருகிறதோ,

எங்கே ஓய்விலா உழைப்பின் கரங்கள் உன்னதத்தை நோக்கி நீள்கிறதோ,

எங்கே பகுத்தறிவு எனும் தெளிந்த நீரோடை, பழமை பழக்கங்களெனும் பயங்கர பாலை மணலில், பாதை தவறாதிருக்கிறதோ,

 எங்கே மனது, பறந்து விரியும் எண்ணங்களிலும், செயல்களிலும், உம்மால் வழிநடத்தப்படுகிறதோ,

அந்த சுதந்திரச் சுவர்கத்தில், தந்தையே, எம் தேசம் விழித்தெழட்டும். -

இரவீந்திர நாத தாகூர்