Tuesday, May 15, 2018

                   
இல்லறத் தேரின்
ஆரக்கால்களாய்
அச்சாணியுமாய்
இயைந்து ஓட இடும்
உயவு எண்ணையாய்
வாழ்க்கைச் சாலையின் எதிர்பாரா வளைவுகளில் தடுமாறாமல் வாகாய்ப் பிடிக்கக் கைப் பிடியாய்
முனைந்து இழுக்கும்
வடக் கயிறாய்
வேகம் தடுக்கும் கட்டையாய்
அழகாய்த் தெரியும்
கூரைத் துணியாய்
அசைந்தாடும் அழகுத் துணித் தூண்களாய்
நடுவே அமர்ந்து நம்மைப் பாலிக்கும்
நாயகியாகவுமிருக்கும்
நங்கை நல்லாளுக்கு நாளெல்லாம் திருவிழாதான்.
தனியே ஏன் ஒரு விழா.

No comments: