இல்லறத் தேரின்
ஆரக்கால்களாய்
அச்சாணியுமாய்
இயைந்து ஓட இடும்
உயவு எண்ணையாய்
வாழ்க்கைச் சாலையின் எதிர்பாரா வளைவுகளில் தடுமாறாமல் வாகாய்ப் பிடிக்கக் கைப் பிடியாய்
முனைந்து இழுக்கும்
வடக் கயிறாய்
வேகம் தடுக்கும் கட்டையாய்
அழகாய்த் தெரியும்
கூரைத் துணியாய்
அசைந்தாடும் அழகுத் துணித் தூண்களாய்
நடுவே அமர்ந்து நம்மைப் பாலிக்கும்
நாயகியாகவுமிருக்கும்
நங்கை நல்லாளுக்கு நாளெல்லாம் திருவிழாதான்.
தனியே ஏன் ஒரு விழா.
No comments:
Post a Comment