ஹிரோஷிமா!
73 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில்தான் ஹிரோஷிமா மீது 'எனோலா கே' எனும் பி-29 ரக போர் விமானம் பறந்தது. அப்போது அந்த நகரின் காலை அழகாக மலர்ந்திருந்தது.
மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு நடுநிலைப் பள்ளியில் காலை வழி
பாட்டுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பேருந்து நிலையம்,வங்கிகள் இயல்பிலி
ருந்தன.பேருந்தில் தந்தைமடியிலிருந்த குழந்தை தன் தாய்க்கு கையசைத்து விடைதந்தது.
ஒரு கணம்.ஒரேகணம். அவ்விமானத்தி
லிருந்து யுரேனியம் நிரம்பிய 'சின்னப் பையன்' எனும் அணுகுண்டு வீசப்பட்டது.
அந்நகரின் உயர்ந்த கட்டிடங்கள் பொடிப்
பொடியாய் உதிர்ந்தது.நகரம் ஒரு இடுகாடைப்போலானது.எங்கும் கதிரியக்கம்.மனிதர்கள் வாழ்ந்த சுவடின்றி நகரை இருளின் நிழல் கவ்வியது.
கூடவே Neccessary evil எனும் இன்னொரு விமானம்.இப்பேரழிவை புகைப்படமெடுத்து ஆவணமாக்கியது.
1,40,000 பேர் மாண்டு போனார்கள்.
எஞ்சியவர்கள் கதிர்வீச்சின் கொடும் விளைவால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் வீழ்ந்தனர்.
தேவையே இல்லாமல் நாகசாகியில் மீண்டும் ஒரு நாசகாரச் செயல்
பேரழிவை நிகழ்த்தி ஏகாதிபத்தியத்தின் மேலாண்மையை நிறுவிய முதல் சோதனை ஹிரோஷிமா.
வியட்நாம்,ஈராக்,ஆப்கானென
அணு அழிவுகள் தொடர்ந்து கொணடிருக்கின்றன.
அணு இல்லாத சமாதானம் நிறைந்த உலகம் எனும் கனவுக்கு அமெரிக்கா ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.
கெட்ட போரிடும் உலகை வேரோடுச் சாய்ப்பதே கவிதை கதை கலை இவற்றின் நோக்கமாக இருக்கமுடியும்.
ஹிரோஷிமா தனது கருப்புக் கதையை கண்ணீர் வழிய நம்மிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.நாம் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.மறந்து விடக்கூடாது.
இந்தியா அதன் வெகுசன விழைவு
களைக் கடந்து அமெரிக்காவின்
அணு அடிமையாக இருக்கிறது.
நாம் கருத்தளவிலாவது அணுவுக்கு
எதிராக நிற்போம்.
இன்று ஹிரோஷிமா நினைவு தினம்.
73 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில்தான் ஹிரோஷிமா மீது 'எனோலா கே' எனும் பி-29 ரக போர் விமானம் பறந்தது. அப்போது அந்த நகரின் காலை அழகாக மலர்ந்திருந்தது.
மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு நடுநிலைப் பள்ளியில் காலை வழி
பாட்டுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பேருந்து நிலையம்,வங்கிகள் இயல்பிலி
ருந்தன.பேருந்தில் தந்தைமடியிலிருந்த குழந்தை தன் தாய்க்கு கையசைத்து விடைதந்தது.
ஒரு கணம்.ஒரேகணம். அவ்விமானத்தி
லிருந்து யுரேனியம் நிரம்பிய 'சின்னப் பையன்' எனும் அணுகுண்டு வீசப்பட்டது.
அந்நகரின் உயர்ந்த கட்டிடங்கள் பொடிப்
பொடியாய் உதிர்ந்தது.நகரம் ஒரு இடுகாடைப்போலானது.எங்கும் கதிரியக்கம்.மனிதர்கள் வாழ்ந்த சுவடின்றி நகரை இருளின் நிழல் கவ்வியது.
கூடவே Neccessary evil எனும் இன்னொரு விமானம்.இப்பேரழிவை புகைப்படமெடுத்து ஆவணமாக்கியது.
1,40,000 பேர் மாண்டு போனார்கள்.
எஞ்சியவர்கள் கதிர்வீச்சின் கொடும் விளைவால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் வீழ்ந்தனர்.
தேவையே இல்லாமல் நாகசாகியில் மீண்டும் ஒரு நாசகாரச் செயல்
பேரழிவை நிகழ்த்தி ஏகாதிபத்தியத்தின் மேலாண்மையை நிறுவிய முதல் சோதனை ஹிரோஷிமா.
வியட்நாம்,ஈராக்,ஆப்கானென
அணு அழிவுகள் தொடர்ந்து கொணடிருக்கின்றன.
அணு இல்லாத சமாதானம் நிறைந்த உலகம் எனும் கனவுக்கு அமெரிக்கா ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.
கெட்ட போரிடும் உலகை வேரோடுச் சாய்ப்பதே கவிதை கதை கலை இவற்றின் நோக்கமாக இருக்கமுடியும்.
ஹிரோஷிமா தனது கருப்புக் கதையை கண்ணீர் வழிய நம்மிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.நாம் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.மறந்து விடக்கூடாது.
இந்தியா அதன் வெகுசன விழைவு
களைக் கடந்து அமெரிக்காவின்
அணு அடிமையாக இருக்கிறது.
நாம் கருத்தளவிலாவது அணுவுக்கு
எதிராக நிற்போம்.
இன்று ஹிரோஷிமா நினைவு தினம்.
No comments:
Post a Comment